Advertisment

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜீரணிக்க முடியாது; அதிகாரிகள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் - ஐகோர்ட்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக, “உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Election 2019: Chennai High Court

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர், வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

Advertisment

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 15ம் தேதி விசாரணைக்கு வந்தது. 

அப்போது இந்த சம்பவத்தில் அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என சி.பி.ஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சி.பி.ஐ விசாரணை குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.  

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த அறிக்கையை  2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், செந்தில் குமார் அமர்வு முன்பு திங்கள்கிழமை (ஜூலை 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது.  

அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த காலத்தில் பணியாற்றிய காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. 

இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர், வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்,  அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டி.ஜி.பி ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதோடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்த வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செயல்படுவது சமூகத்துக்கு மோசமானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

மேலும், தூத்துக்குடியில் அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரியும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment