Advertisment

அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது; தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

கிருஷ்ணகிரியில் அண்ணாமலையின் படத்தை ஆட்டின் தலையில் ஒட்டி, ஆட்டை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், இது போன்ற நிகழ்வுகளை வேடிக்கைப் பார்க்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
chennai hc

இது போன்ற நிகழ்வுகளை வேடிக்கைப் பார்க்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பா.ஜ.க கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. கோவையில் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்தார். 

Advertisment

அண்ணாமலையின் தோல்வியைக் கொண்டாடும் விதமாக, கிருஷ்ணகிரியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படத்தை ஆட்டின் தலையில் ஒட்டி, சிலர் சாலையில் அந்த ஆட்டை வெட்டிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, சமூக வலைதளங்களில் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன.

இதைத் தொடர்ந்து, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை படத்தை வைத்து, பொது இடத்தில் ஆட்டை வெட்டிய தி.மு.க தொண்டர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க வழக்கறிஞர் மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சஃபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது போல சாலையில் ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment