Advertisment

குழந்தைகளை மீட்கும் தமிழக அரசின் செயல்பாட்டில் திருப்தி இல்லை - ஐகோர்ட்

எத்தனை வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குழந்தைகளை மீட்கும் செயல்பாட்டில் திருப்தி இல்லை

குழந்தைகளை மீட்கும் செயல்பாட்டில் திருப்தி இல்லை

தமிழகத்தில் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை உயர்நீதிமன்றம்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்ஸ்னோரா நிர்மல் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்த அட்கொனர்வு மனுவில், சென்னையில் பெற்றோருடன் சாலையோரத்தில் வசிக்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

அந்த குழந்தைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், எஸ்பிளனேடு பகுதியில் சாலையோரத்தில் பெற்றோருடன் வசித்து இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை ராகேஷ், 9 மாத குழந்தை சரண்யா ஆகியோர் 2016 ஆம் ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.

இந்த குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, மேலும் குழந்தை கடத்தலை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர், எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி படையை உருவாக்க தமிழக அரசுக்கு 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக உள்துறை சார்பில் துணைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இதுவரை இரண்டு பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தல் விஷயத்தில், அரசும், காவல்துறையும் தீவிரம் காட்டாமல் இருப்பதாகவும், இதுவரை இருவருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இந்த நிதியத்திற்கு போதுமான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

எத்தனை வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது?

எத்தனை வழக்குகள் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்?

என்பன குறித்த விவரங்களை வரும் 24 ஆம் தேதி (ஆகஸ்ட்) அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட விசாரணையை அன்றைய தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment