பிகில் படத்துக்கு தடை கோரி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு
Case against bigil release : பிகில் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் இயக்குனர் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிகில் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் இயக்குனர் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிகில்' . இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து அதனை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், ஆனால் தற்போது என்னுடைய கதை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளதாகவும் இதனால் எனக்கு பாதிப்பு ஏற்படும் எனவே பிகில் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் அட்லீக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.