நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில், அடுத்துள்ள சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த முதல்வருமான கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி அறக்கட்டளையின் தயா பொறியியல் கல்லூரி செயல்படுகிறது. மு.க.அழகிரிக்கு சொந்தமான பொறியியல் கல்லூரிக்கு அருகில் இருந்த 44 செண்ட் கோயில் நிலத்தை அபகரித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சம்பத்குமார் உள்பட 7 பேர் மீது நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நில அபகரிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து மட்டும் அழகிரியை விடுவித்து கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.வேல்முருகன் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (04.03.2025) விசாரணைக்கு வந்தத. அப்போது, நில அபகரிப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை ஏற்று, போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து மு.க. அழகிரியை விடுவித்து மதுரை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி, மு.க. அழகிரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.