/indian-express-tamil/media/media_files/2025/09/19/senthil-balaji-chennai-high-court-2-2025-09-19-07-38-03.jpg)
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 15-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) 45,800 டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய, ரூ.1,182.88 கோடிக்கு டெண்டர் கோரியது. இந்த டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சுமார் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இந்த முறைகேட்டில் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கோரியிருந்தது.
இந்த வழக்கு வியாழக்கிழமை நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், “36 ஒப்பந்ததாரர்கள் தங்களின் டெண்டர் ஒப்பந்தங்களில் ஒரே விலையைக் குறிப்பிட்டுள்ளனர், பைசா அளவில் கூட மாற்றம் இல்லை” என்று வாதிட்டார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.