/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-69-2.jpg)
Tamil Nadu news today
நிலத்தடி நீர் எடுக்க வாகன அனுமதி பெற்றவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் சுற்றி சுமார் 1500 குடும்பங்கள் உள்ள நிலையில், சில தனியார் தண்ணீர் நிறுவனங்கள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து வருவதை எதிர்த்தும் இதற்கு தடை விதிக்க கோரியும் நங்கநல்லூரை சேர்ந்த இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, சட்டவிரோதமாக நீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நங்கநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக எடுக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் சட்டவிரோதமாக நீர் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள், சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படவில்லை என எந்த அடிப்படையில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது? என கேள்வி எழுப்பினர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், சட்டவிரோதமாக, நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் நீர் எடுத்து செல்வதற்கான வாகன அனுமதி பெற்ற விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.