/tamil-ie/media/media_files/uploads/2017/08/Traffic-police-1.jpg)
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறுவுறுத்தியுள்ளது. மேலும் அரசு உத்தரவில் தலையிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
வருகிற செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வராத காரணத்தால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு முன்பு அவர் முறையிட்டார்.
மேலும் வாடகைக்காக வாகனத்தை ஓட்டுபவர்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் வாகன ஓட்டிகளாக பணியாற்றுபவர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை உரிமையாளரிடம் ஒப்படைப்பர், எனவே அவர்களால் அசல் உரிமத்தை எடுத்து செல்ல இயலாது. அதேபோல, அசல் உரிமம் தொலைந்தால் புதிய ஓட்டுநர் உரிமம் எடுப்பதில் சிக்கல்கள் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருதி, இந்த விவகாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரினார்.
அப்போது தலைமை நீதிபதி அமர்வு, வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு பட்டியலில் வரும் போது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.