பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்டோர் அடையாளம் எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது - டி.பி.பி-க்கு ஐகோர்ட் உத்தரவு!

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவத்திலும் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவத்திலும் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai hc

, பாலியல் வன்கொடுமை வழக்குகளை கையாளுவதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவத்திலும் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்குமாறு தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளை கையாளுவதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும்; மீறினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை எந்த வடிவத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

மேலும், தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment
Advertisements

கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவான ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான புலன் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி, குற்றம் சாட்டப்பட்டவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், கீழ்ப்பாக்கம் போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட அடையாளங்கள் இடம் பெற்றிருப்பதைக் கண்டறிந்தார்.

இது குறித்து நீதிபதி வேல்முருகன், "பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால், புலன் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் இந்த உத்தரவை மதிப்பதில்லை. இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் உடனடியாக நீக்க வேண்டும். இந்த விதியை மீறினால், ஒட்டுமொத்த காவல் துறையும் பொறுப்பாக்கப்படும், மேலும் மீறுபவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளைக் கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை என்றும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஏற்கனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் காவல்துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: