இருவிரல் பரிசோதனை குறித்து டி.ஜி.பி-க்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai high court important order to DGP, madras high court, court order to avoid Two Finger test in sexual assault case, இருவிரல் பரிசோதனை, சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு, Two Finger test, Chennai high court order to avoid in sexual assault case

சென்னை ஐகோர்ட்

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சிறுவர்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக, புகைப்படங்கள் வெளியானது.

சிதம்பரத்தில் நடந்த குழந்தைத் திருமணம் தொடர்பான புகாரின் பேரில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்ட சிறுவன், சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். மேலும், போலீசார் விசாரணை நடத்தி குழந்தைத் திருமணம் நடந்த வீடியோ ஆதாரத்தையும் சேகரித்தனர்.

இந்த விவகாரம் குறித்து ஒரு ஆங்கில செய்தித்தாளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி கவனம் பெற்றது. அதில், தீட்சிதர்கள் தங்களது 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. பொய்யான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் மிரட்டல் காரணமாக தீட்சிதர்கள் ஒப்புக் கொண்டனர். இந்த விவகாரத்தால் தீட்சிதர்களின் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை அழைத்துச் சென்று இருவிரல் பரிசோதனை செய்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

Advertisment
Advertisements

மேலும், அவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர். சிலர் தற்கொலைக்கும் முயன்றனர். இதுபற்றி தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். குழந்தைத் திருமணம் செய்யப்பட்டதாகக் கூறி சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் கூறிய பகீர் குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இருவிரல் பரிசோதனை முறை 2013-ல் இருந்து தடை செய்யப்பட்ட ஒன்று. அந்த பரிசோதனை செய்யப்படவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய தகவல் முற்றிலும் பொய்யானது என்று விளக்கம் அளித்தார்.

மேலும், குழந்தை திருமணத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சிறுமிகளுக்கு தேவையான மருத்துவ உதவியும், பரிசோதனையும் செய்யப்பட்டது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதற்கிடையில் சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், போலீசார் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.

குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் மீது எந்த தவறும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: