/tamil-ie/media/media_files/uploads/2017/06/Kathir-Tamilnadu-Madras-High-Court.jpg)
நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில் நடந்த மரணங்கள் ட்தமிழகதையே உலுக்கியது. மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனையை ஆளும் தி.மு.க அரசு தவறிவிட்டது என்று அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தி.மு.க அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராய மரணம் தொடர்பாக, விஷ சாராயத்தை விற்பனை செய்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கன்னுக்குட்டி எனும் கோவிந்தராஜ், அவருடைய மனைவி விஜயா, அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தமிழக அரசு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை தமிழ்நாடு அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, விஷச் சாராயமான மெத்தனாலை சப்ளை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான மெத்தனாலை சப்ளைச் செய்த முக்கிய குற்றவாளியான சிவக்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் பா.ம.க சார்பில் விஷச் சாராய வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு பதிலாக சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று நவம்பர் 20 தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.