Advertisment

தூய்மை பணியை குறிப்பிட்ட சமூகத்திற்கு வழங்க கோரிய வழக்கு; ஐகோர்ட் முக்கிய கருத்து

தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? – சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

author-image
WebDesk
New Update
Madurai HC

தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? – சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, ’அது ஜனநாயகத்துக்கு எதிரானது’ என கருத்து தெரிவித்துள்ளது.

Advertisment

தூய்மை பணியாளர்களாக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபர்களை மட்டும் நியமிக்க உத்தரவிட கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். மேலும், மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பலர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். மறுபுறம், பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்யும் பணிகள் போன்றவை ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் தூய்மை பணியாளர்கள் வேலை இல்லாமல், கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். டெண்டர் எடுத்த தனியார்கள் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். 

இதுகுறித்து நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ள தூய்மைப் பணி ஒப்பந்தங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். தூய்மை பணிகளைச் செய்து வரும் குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொண்டு சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, தூய்மை பணி ஒப்பந்தங்களையும், கழிப்பிட பராமரிப்பு ஒப்பந்தங்களையும் அவர்களுக்கு வழங்க உத்தரவிடக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளையில், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்துக்கு எதிரானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் மனுதாரர் தனது கோரிக்கையை திருத்தி தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில் வழக்கின் கோரிக்கையை திருத்தி சமர்பிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை 2 வார காலத்திற்கு தள்ளி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment