மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவும் சமுதாய மற்றும் மத சிக்கல்கள், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முக்கிய விவாதத்திற்கிடையாக அமைந்தன.
விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், திருப்பரங்குன்றம் மலையை ‘சமணர் குன்று’ என அறிவிக்கக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. “இந்த மலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது; இது சமணர் மலையாகும். எனவே இம்மலையில் சமணர்களின் சின்னங்களுக்கும் மரபுகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டது.
அதேபோல், சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த சோலை கண்ணன் மற்றும் ராமலிங்கம் ஆகியோரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், “திருப்பரங்குன்றம் மலையில் கால்நடைகளை பலியிடும் நடைமுறையைத் தடுக்க வேண்டும்” மற்றும் “இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் பொதுவான தொழுகை உள்ளிட்ட செயல்களுக்கு தடையிட வேண்டும்” என கோரியுள்ளனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் இன்று நீதிபதிகள் ஜெ.நிஷாபானு மற்றும் எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் பதிலாக தாக்கல் செய்த மனுவில், “திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் பல சமயத்தினர் தலைமுறைகளாக வழிபாட்டு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இங்கு இந்து, சமண மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தின் இடையிலான சமய ஒற்றுமை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடக்கூடாது” என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், “இங்கு முருகன் கோயில், சமணர் அடையாளங்கள் மற்றும் தர்கா ஆகியவை ஒரே இடத்தில் உள்ளன. மக்கள் இதனை ‘திருப்பரங்குன்றம் மலை’, ‘ஸ்கந்தமலை’, ‘சிக்கந்தர் மலை’, ‘சமணர் குன்று’ எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கின்றனர். இது நீண்ட காலமாக அனைத்து மதத்தினராலும் பக்தி மற்றும் நம்பிக்கையுடன் பார்க்கப்படுகின்றது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1991-ல் கொண்டு வரப்பட்ட “வழிபாட்டு தலங்களுக்கான பாதுகாப்புச் சட்டம்” அடிப்படையில், 1947-ம் ஆண்டு நிலைபோலவே இத்தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொல்லியல் துறையின் தரப்பிலும் பதிலளிக்கப்பட்டு, “திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே எந்தவொரு நடவடிக்கைக்கும் மத்திய தொல்லியல் துறையின் அனுமதி கட்டாயம்” என கூறியுள்ளனர்.
மனுதாரர்கள் தரப்பில், “1923-ல் மதுரை முதன்மை அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பை பிரிட்டிஷ் கவுன்சில் உறுதி செய்துள்ளது” என வலியுறுத்தினர்.
பின்னர் வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்: “அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கிறார்கள். சில மனிதர்கள் தான் சரியாக இல்லை” எனக் கடுமையாக கூறிய நீதிபதிகள், மத்திய தொல்லியல்துறையிடம் பதில் மனு தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் தரப்பில் பழைய உத்தரவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இவ்வழக்கு ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை சுற்றி “கடவுள்கள் எல்லாம் சரியாகவே இருக்கிறார்கள்; சில மனிதர்களே தவறு” - ஐகோர்ட் கருத்து
அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கிறார்கள். சில மனிதர்கள் தான் சரியாக இல்லை; திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து
அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கிறார்கள். சில மனிதர்கள் தான் சரியாக இல்லை; திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து
மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவும் சமுதாய மற்றும் மத சிக்கல்கள், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முக்கிய விவாதத்திற்கிடையாக அமைந்தன.
விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், திருப்பரங்குன்றம் மலையை ‘சமணர் குன்று’ என அறிவிக்கக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. “இந்த மலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது; இது சமணர் மலையாகும். எனவே இம்மலையில் சமணர்களின் சின்னங்களுக்கும் மரபுகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டது.
அதேபோல், சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த சோலை கண்ணன் மற்றும் ராமலிங்கம் ஆகியோரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், “திருப்பரங்குன்றம் மலையில் கால்நடைகளை பலியிடும் நடைமுறையைத் தடுக்க வேண்டும்” மற்றும் “இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் பொதுவான தொழுகை உள்ளிட்ட செயல்களுக்கு தடையிட வேண்டும்” என கோரியுள்ளனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் இன்று நீதிபதிகள் ஜெ.நிஷாபானு மற்றும் எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் பதிலாக தாக்கல் செய்த மனுவில், “திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் பல சமயத்தினர் தலைமுறைகளாக வழிபாட்டு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இங்கு இந்து, சமண மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தின் இடையிலான சமய ஒற்றுமை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடக்கூடாது” என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், “இங்கு முருகன் கோயில், சமணர் அடையாளங்கள் மற்றும் தர்கா ஆகியவை ஒரே இடத்தில் உள்ளன. மக்கள் இதனை ‘திருப்பரங்குன்றம் மலை’, ‘ஸ்கந்தமலை’, ‘சிக்கந்தர் மலை’, ‘சமணர் குன்று’ எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கின்றனர். இது நீண்ட காலமாக அனைத்து மதத்தினராலும் பக்தி மற்றும் நம்பிக்கையுடன் பார்க்கப்படுகின்றது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1991-ல் கொண்டு வரப்பட்ட “வழிபாட்டு தலங்களுக்கான பாதுகாப்புச் சட்டம்” அடிப்படையில், 1947-ம் ஆண்டு நிலைபோலவே இத்தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொல்லியல் துறையின் தரப்பிலும் பதிலளிக்கப்பட்டு, “திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே எந்தவொரு நடவடிக்கைக்கும் மத்திய தொல்லியல் துறையின் அனுமதி கட்டாயம்” என கூறியுள்ளனர்.
மனுதாரர்கள் தரப்பில், “1923-ல் மதுரை முதன்மை அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பை பிரிட்டிஷ் கவுன்சில் உறுதி செய்துள்ளது” என வலியுறுத்தினர்.
பின்னர் வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்: “அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கிறார்கள். சில மனிதர்கள் தான் சரியாக இல்லை” எனக் கடுமையாக கூறிய நீதிபதிகள், மத்திய தொல்லியல்துறையிடம் பதில் மனு தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் தரப்பில் பழைய உத்தரவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இவ்வழக்கு ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.