பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு; சீமான் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது; சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது; சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyar and Seeman

பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சுக்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில் பேட்டியளிக்கும் போது, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் மீது கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சீமான் மீது போலீசார் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

Advertisment
Advertisements

மனுவை விசாரித்த நீதிபதி, "பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளதாக இருப்பதால், சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

மேலும், சீமான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை அண்ணா நகர் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Periyar Madurai High Court Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: