Advertisment

சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் முறைகேடு: விசாரணை நடத்தக் கோரி வழக்கு

கோவில்களில் சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் முறைகேடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் முறைகேடு: விசாரணை நடத்தக் கோரி வழக்கு

தமிழகத்தில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சிலைகளை பாதுகாக்க,15 சிலை பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீட்ட சிலைகளை பாதுகாப்பு அறைகளில் வைக்காமல் சம்பந்தப்பட்ட கோவில்களிடம் ஒப்படைக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், 15 சிலை பாதுகாப்பு மையங்கள் அமைக்க தலா 90 லட்சம் ரூபாய் முதல் 95 லட்சம் ரூபாய் வரை அறநிலையத்துறை ஒதுக்கியுள்ளது... இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் தலைமையில் இரண்டு இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவை அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, இரண்டு வாரங்களில் இதுகுறித்து பதிலளிக்க இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment