Advertisment

மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம்! - அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

அரசின் உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மழை நீர் சேமிப்பு வசதி

மழை நீர் சேமிப்பு வசதி

மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு உரிய அபராதம் விதிப்பது தொடர்பாக பரீசிலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக வழக்கறிஞர் தியாகராஜன் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை உருவாக்க வேண்டும் என கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த அரசின் உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என விதி உள்ள நிலையில், அண்மைக் காலங்களில் எந்த ஒரு கட்டிடங்களும் இதுபோல மழைநீர் சேமிப்பு வசதியை ஏற்படுத்துவதில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் , நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலித்து எட்டு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment