மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு உரிய அபராதம் விதிப்பது தொடர்பாக பரீசிலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் தியாகராஜன் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை உருவாக்க வேண்டும் என கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த அரசின் உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என விதி உள்ள நிலையில், அண்மைக் காலங்களில் எந்த ஒரு கட்டிடங்களும் இதுபோல மழைநீர் சேமிப்பு வசதியை ஏற்படுத்துவதில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் , நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலித்து எட்டு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Chennai high court news
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை