Advertisment

ஆசிரியராக பணியாற்றும் போதே மேற்படிப்பு படிப்பது கண்டிக்கத்தக்கது! - ஐகோர்ட்

அனுமதியின்றி ஆசிரியர்கள் எவரும் முழு நேர மேற்படிப்பை படிக்கவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அனுமதியின்றி ஆசிரியர்கள் எவரும் முழு நேர மேற்படிப்பை படிக்கவில்லை

அனுமதியின்றி ஆசிரியர்கள் எவரும் முழு நேர மேற்படிப்பை படிக்கவில்லை

கல்லூரிகளில் முழுநேர ஆசிரியராக பணியாற்றும் போது, முழு நேர மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரியில் முழு நேர ஆசிரியராக பணியாற்றும் போது, அண்ணா பல்கலைக் கழகத்தில், கல்லூரி அனுமதியின்றி முழு நேர மேற்படிப்பு படித்ததாக கூறி, சண்முகவள்ளி என்பவரின் தேர்வுகளை ரத்து செய்து, அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகவள்ளி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், பல்கலைக்கழகம், கல்லூரிகளின் அனுமதியின்றி ஆசிரியர்கள் எவரும் முழு நேர மேற்படிப்பை படிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியராக பணியாற்றும் போதே, மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது எனக் கூறி, தேர்வு்க கட்டுப்பாட்டாளரின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment