Advertisment

மாவட்ட சிறார் நீதி வாரியங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

மாவட்ட சிறார் நீதி வாரியங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாவட்ட சிறார் நீதி வாரியங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

தமிழகத்தில் உள்ள மாவட்ட சிறார் நீதி வாரியங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள மாவட்ட சிறார் நீதி வாரியங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க, சட்டப்படி தேர்வு குழுவை அமைத்து, நியமனம் செய்ய உத்தரவிட கோரியும், அதற்கான புதிய விதிகளை வகுக்க கோரியும் சீனிவாச ராகவன், ஆனந்தராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழ்ககு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாவட்ட சிறார் நீதி வாரியங்களுக்கு புதிய

உறுப்பினர்களை நியமிக்க தடை விதித்து 2017 ஏப்ரலில் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹுலுவாடி.ஜி.ரமேஷ் மற்றும் தண்டபாணி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தற்போதைய உறுப்பினர்கள் பதவிக்காலம் 2015 ஆண்டோடு முடிவடைந்து விட்டதால் பழைய விதிகளை பின்பற்றி புதிய உறுப்பினர்கள் தேர்வு நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டதால், உறுப்பினர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment