Advertisment

நடத்துனர் இல்லாமல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறதா? பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

பேருந்துகளில் நடத்துனர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடத்துனர் இல்லாமல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறதா? பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்குவதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக போக்குவரத்து துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பல பேருந்துகளில், நடத்துனர் இல்லாமல், ஓட்டுனர் மூலம் மட்டும் இயக்கப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பேருந்துகளில் நடத்துனர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் நடத்துனர் இல்லாமல் பேருந்து இயக்குவது மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், மாநகரம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறதா? என்பது குறித்து வரும் 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க போக்குவரத்து செயலாளருக்கு உத்தரவிட்டார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment