கடவுள் மீது பக்தி கொண்ட எவரும் ஆக்கிரமிப்பு இடங்களில் கோவில் கட்டமாட்டார்கள் - சென்னை ஐகோர்ட்

கடவுள் மீது பக்தி கொண்ட எவரும் இடிக்கப்படும் என தெரிந்தே ஆக்கிரமிக்கப்பட்ட அரசு இடத்தில் கோவில் கட்டமாட்டார்கள்

கடவுள் மீது பக்தி கொண்ட எவரும் இடிக்கப்படும் என தெரிந்தே ஆக்கிரமிக்கப்பட்ட அரசு இடத்தில் கோவில் கட்டமாட்டார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கடவுள் மீது பக்தி கொண்ட எவரும் ஆக்கிரமிப்பு இடங்களில் கோவில் கட்டமாட்டார்கள் - சென்னை ஐகோர்ட்

கடவுள் மீது பக்தி கொண்ட எவரும் இடிக்கப்படும் என தெரிந்தே ஆக்கிரமிக்கப்பட்ட அரசு இடத்தில் கோவில் கட்டமாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை ரிசர்வ் வங்கிக்கு எதிரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை தலைமை செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோட்டை பாளையத்தம்மன் கோவிலை காலி செய்து இடத்தை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரும், புரசைவாக்கம் வட்டாட்சியர் கோயில் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த நோட்டீஸை எதிர்த்து கோவில் பூசாரி குருசாமி என்கிற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரின் மனுவில் 500 பக்தர்கள் சேர்ந்து கட்டிய அந்த கோவிலை 50 வருடமாக பராமரித்து வருவதாகவும், எனவே இந்த கோவிலை அகற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் கோயிலை காலி செய்ய கோரிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்திற்கு தெரிவித்த பிறகே காலி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

Advertisment
Advertisements

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், கோவிலை காலி செய்ய கோரி அரசு உத்தரவை எதிர்த்து பூசாரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.  மேலும், நீதிபதிகள் தங்களின் உத்தரவில் பல்வேறு கருத்துக்களை தொரிவித்துள்ளனர்.

புராணங்களில் சொல்லப்பட்ட பிரகலாதன் கதையில் கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என சொல்லப்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என எந்த கடவுள் கேட்பதில்லை. தெய்வங்களின் சிலை வைத்து கோவில் எழுப்ப விரும்பினால் அது அங்கீகாரம் பெற்ற நிலமாக இருக்க வேண்டும். கடவுள் மீது உண்மையான பக்தி கொண்ட எவரும் இடிக்கப்படும் என தெரிந்தே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு இடத்தில் கோவில் கட்டமட்டார்கள். மேலும் சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலான கோவில்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுயநலத்திற்காகவே அமைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கருத்து தெரிவித்துள்ளார்.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: