அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்.
அமைச்சர் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு தடைகோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹெச் ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா அமர்வு, கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடர்பான வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீபதிபதியின் ஓப்புதல் பெற்றுதான், தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருகிறாரா? இல்லையென்றால் தன்னிச்சையாக விசாரித்து வருகிறாரா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அதுசார்ந்த விவரங்கள் கூடிய அறிக்கையை வரும் திங்கள்கிழமைக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டின் தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி கோரி தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 21. 08.2023 அன்று கடிதம் எழுதி இருந்தார். ஆனால் கடித்தத்தில் 23.8.2023 அன்று பதிவாளர் அலுவலகம் தலைமை நீபதிக்கு அனுப்பி வைத்தது.
இருந்தும் பின்னர் அந்த கடிதத்தில் 31.08.2023 அன்று தலைமை நீதிபதி பார்த்துவிட்டார். அதே நேரத்தில் முன் அனுமதி கடிதத்தை தலைமை நீதிபதி பார்ப்பதற்கு முன்பாகவே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கின் விசாரணையை தொடங்கிவிட்டார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“