தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு; அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்த அறிவுறுத்தல்

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களை, அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது, அவர்களை அப்புறப்படுத்துங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களை, அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது, அவர்களை அப்புறப்படுத்துங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai hc sanitary worker protest

சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களை, அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது, அவர்களை அப்புறப்படுத்துங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு, சி.பி.எம், வி.சி.க, நா.த.க, த.வெ.க மற்றும் பல்வேறு இயக்கங்கள் ஆதரவு அளித்து வருகின்றன. 

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், தூய்மைப் பணியாளர்கள் தொடரந்து போராடி வருகின்றனர். 

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள், சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

Advertisment
Advertisements

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை  நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவ அமர்வு, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மீடு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்திக்கொள்ளுங்கள். சட்டத்திற்கு உட்பட்டு அனைவரையும் அப்புறப்படுத்துங்கள்” என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள், கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும், “எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். சென்னை மாநகராட்சியிடம்தான் எங்களது கோரிக்கையை முறையிட முடியும். வேறு ஒரு இடத்தில் போராட முடியாது” என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: