டாஸ்மாக் வழக்கு: மார்ச் 25 வரை நடவடிக்கை கூடாது; விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இ.டி-க்கு ஐகோர்ட் உத்தரவு

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 25 வரை நடவடிக்கை கூடாது என்றும் இதில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 25 வரை நடவடிக்கை கூடாது என்றும் இதில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
hc tas ed

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உளிட்ட 20 இடங்களில் மார்ச் 6,7,8 ஆகிய 3 நாட்கள் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிக்கப்பட்டதாகவும் அதே போல, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது பாட்டில்கள்களை விநியோகம் செய்யும் மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது தொடர்பாகவும் கொள்முதலில் குறைத்துக் காட்டியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிய அமலாக்கத்துறை, இதன் மூலம், சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் தெரிவித்தது. 

Advertisment

இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எந்த தொல்லைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என்றும் அதே போல, அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் 3 கோரிக்கைகள் வைத்து தனித்தனியாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி வாதாடினார். அவர் வாதிடுகையில், டாஸ்மாக் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் சோதனை செய்ய வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் டாஸ்மாக் தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார். 

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மணல் குவாரி விவகாரத்தில் இது போல, அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும், பின்னர் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு தடைவிதித்ததாகவும் கூறினார். அதே போலத்தான், இப்போது, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி ஆஜராகி வாதாடினார். அவர், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அதுமட்டுமில்லாமல், மாநில அரசின் அனுமதி பெற்றுதான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வாதிட்டார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் எதையும் குறிப்பிடவில்லை என்றும் கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் விக்ரம் சவுத்ரி கூறுகையில், அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரியிஅ காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். சோதனை நடத்துவதற்கு சென்றால், அமலாக்கத்துறை இயக்குநரோ அல்லது துணை இயக்குநரோதான் செல்ல வேண்டும் எல்லோரும் சோதனைக்கு செல்ல முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், சோதனை செய்வதற்கான முகாந்திரம் இருக்க வேண்டும். அதற்கான முகாந்திரத்தை எழுத்துப் பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே சோதனைக்கு உள்ளே செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சோதனையின்போது, சுமார் 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்ட விரோதமாக அமலாக்கத்துறை பிடித்து வைத்துள்ளது என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், அந்த 3 நாட்களும் அதிகாரிகளை வெளியே விடவில்லையா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை பிடித்து உள்ளே வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். 

அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  “எதற்காக சோதனை நடத்தப்பட்டகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா? இரவு நேரத்திலும் சோதனையா?” என்று கேட்டனர். அதற்கு, “இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை. யாரையும் துன்புறுத்தவில்லை” என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், “எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்?.. அமலாக்கத்துறைகு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்” என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மார்ச் 25-ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு தடைவிதித்த நீதிபதிகள்,
வழக்கு விசாரணையை மார்ச் 25-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக உத்தரவிட்டனர். 

Chennai High Court Tasmac

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: