Advertisment

ராஜீவ் கொலைக் கைதி முருகனின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஜீவசமாதி அடையப்போவதாக தெரிவித்துள்ள ராஜீவ் கொலை குற்றவாளி முருகனின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajiv gandhi, Murugan

ஜீவசமாதி அடையப்போவதாக தெரிவித்துள்ள ராஜீவ் கொலை குற்றவாளி முருகனின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தஞ்சாவூரை சேர்ந்த முருகனின் உறவினர் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், ஜீவசமாதி அடைய போவதாக, ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் உணவு உண்ணாமலும், யாரிடமும் பேசாமலும் தியானத்தில் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேலூர் சிறையில் இருக்கும் முருகனை பார்க்க சென்றபோது, சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். சிறை உணவை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படுவதன் அடிப்படையில், பார்வையார்களை சந்திக்க அனுமதிக்க முடியாது என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முருகனை சந்திக்க அனுமதியளிக்க தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் உத்தரவிட வேண்டும். கடந்த 7 நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முருகனின் உயிரை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞரிடம், முருகனுக்கு என்ன மருத்துவ சிகிச்சை தருகிறீர்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அரசு வழக்கறிஞர், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று பதிலளித்தார்.

இதையடுத்து, முருகனை பார்க்க மனுதாரை அனுமதித்தால் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். முருகனால் பேச இயலாது. அதனால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை என அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், மனுதாரர் முருகனின் நெருங்கிய உறவினருக்கு அனுமதி தந்திருக்கலாம் என்று கூறியதுடன், நாளை மறுநாள் முருகனின் உடல் நிலை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை வேலூர் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும என உத்தரவிட்டனர். அன்றைய தினத்துக்கு விசாரணையை தள்ளி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai High Court Nalini Rajiv Gandhi Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment