3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கோரி வழக்கு: முன்சீப் நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் ஆணை

மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்றும், குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு அது ஆதரவாகவே அமையும் எனவும் கூறி மூன்றாவது பிரசவத்திற்காகவும் மகப்பேறு விடுப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்றும், குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு அது ஆதரவாகவே அமையும் எனவும் கூறி மூன்றாவது பிரசவத்திற்காகவும் மகப்பேறு விடுப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
pregnancy chennai high court

மூன்றாவது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. Photograph: (Freepik)

மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்றும், மூன்றாவது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆணையிட்டுள்ளது.

Advertisment

மேலும், மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உளுந்தூர்பேட்டை கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவர் தனக்கு மூன்றாவது பிரசவத்திற்காக ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் கோரியிருந்தார். இவருடைய கோரிக்கையை உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நீதிபதி நிராகரித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து ரஞ்சிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தார்.

Advertisment
Advertisements

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.

மேலும் அந்த உத்தரவில், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: