இன்ஃபோசிஸிஸ் நிறுவனம் கூறுகையில், செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி அலுவலகத்தில் உள்ள உள்ள பிரிவுக்கு மானியத்துடன் கூடிய தொழில்துறை மின் கட்டணத்திற்கான மனுவை நிராகரித்த தனி நீதிபதி, 2009 முதல் 2010 வரை அதன் பி.பி.ஓ நடவடிக்கைகளுக்கான கட்டண வகை III கட்டணத்தையும் அதன் அனைத்து நடவடிக்கைகளுக்கான வணிக கட்டணத்தையும் செலுத்த உத்தரவிட்டார். வணிக ரீதியாக உணவகம், வங்கிகள், கிளப்புகள் மற்றும் அதன் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட தொழில்துறை கட்டணத்திற்கு எந்தவிதமான தனி பிரிவுகளும் இல்லை.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இன்ஃபோசிஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. டான்ஜெட்கோவின் மூத்த வழக்கறிஞர் பி. வில்சனின் பதில்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது.
பி.பி.ஓ செயல்பாடுகளைப் பொறுத்த வரையில், இன்ஃபோசிஸ் அதைப் பற்றி ஒப்புக் கொண்டுள்ளது, எனவே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த மின் கட்டண வகை III, 2010 வரையிலான பி.பி.ஓ செயல்பாடுகளுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று வில்சன் பதில் அளித்தார்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 வரையிலான பி.பி.ஓ நடவடிக்கைகளுக்கான வணிக கட்டண விகிதங்களை நிர்ணயித்துள்ளது. எனவே, அதுவே இங்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
இன்ஃபோசிஸ் வளாகத்திற்குள் வர்த்தகப் பெயர்களில் நிறுவப்பட்ட உணவகங்கள், வங்கிகள் மற்றும் கிளப்புகள் போன்ற வணிகச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, இன்ஃபோசிஸ் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அனுமதித்துள்ள நிலையில், 2017-ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த கட்டண விகிதங்களின் அடிப்படையில் எந்த தொழில்துறை கட்டண விகிதத்தையும் பயன்படுத்த முடியாது.
இன்ஃபோசிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மின்சாரச் சட்டத்தின் 56(2) பிரிவின் கீழ் டான்ஜெட்கோவின் பாக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளன, எனவே, பி.பி.ஓ பயன்பாட்டிற்காக எந்தத் தொகையையும் திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்தார்.
வணிகப் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் ஊழியர்களின் நலனுக்காகவே உள்ளன என்றும் அவர் பதில் மனு தாக்கல் செய்தார். எனவே, இன்ஃபோசிஸ் வளாகத்திற்குள் இந்த வணிக நடவடிக்கைக்கு ஒரு சலுகையாக தொழில்துறை கட்டணம் விதிக்கப்பட வேண்டும்.
இதை எதிர்த்து, வழக்கறிஞர் வில்சன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சாரச் சட்டத்தின் கீழ் கட்டணங்களை நிர்ணயிக்கும் ஒழுங்குமுறை அமைப்பாகும். எனவே, கட்டணங்களுக்கு சட்டப்பூர்வ ஆதரவு உள்ளது, இது பேச்சுவார்த்தைக் உட்படாது.
வில்சனின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்ற அமர்வு, இன்ஃபோசிஸ் நிறுவனம் இரண்டு வாரங்களுக்குள் ரூ.2.5 கோடியை செலுத்த வேண்டும் என்று இடைக்காலஉத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.