'திருவள்ளூர் கலெக்டர் மீது துறைரீதியில் நடவடிக்கை': ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பட்டா மாற்றம் செய்து தரக் கோரிய மனுவை 6 மாதங்களாக பரிசீலிக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டா மாற்றம் செய்து தரக் கோரிய மனுவை 6 மாதங்களாக பரிசீலிக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madras High Court  questions over Kallakurichi hooch tragedy Tamil News

தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Chennai-high-court: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்த ராஜன். இவர் தனது விவசாய நிலத்தை பட்டா மாற்றம் செய்து தரக்கோரி கடந்த மே மாதம்  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். 

Advertisment

தனது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவிந்த ராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பட்டா மாற்றம் செய்யக் கோரிய மனுவை 6 மாதங்களாக பரிசீலிக்காததை சுட்டிக்காட்டி இரண்டு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். 

மேலும், வருவாய் துறையில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், மனுக்கள், மேல்முறையீடு மனுக்கள், மறுஆய்வு மனுக்கள் மீது உரிய காலத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம்  சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நில நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த சுற்றறிக்கையை வருவாய் துறையினர் முறையாக பின்பற்றவில்லை என நீதிபதி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

இந்த வழக்கில் மனுதாரரின் மனு மீது குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்காத போக்கு 'ஒரு மெத்தன போக்கு' என்றும் நீதிபதி தனது கண்டனத்தில் பதிவு செய்துள்ளார். மனு மீது குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு எதிராக இரண்டு மாத காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: