Advertisment

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்கள்; பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு

போட்டித் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai high court

410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டித் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

போட்டி தேர்வை எதிர்த்து 410 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்த 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடைந்த நிலையில் 10 ஆண்டுகளாக 410 ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக காத்திருக்கிறார்கள்.

தகுதித் தேர்வு எழுதி பணி நியமனத்திற்கு காத்திருக்கும் நேரத்தில் 2018-ம் ஆண்டு போட்டி தேர்வை அரசு கொண்டு வந்ததால் பணி நியமனம் இல்லாமல் காத்திருக்கும் ஆசிரியர்கள் 410 பேருக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியான மகாதேவன் அமர்வுக்கு முன்பு விசாரணையில் இருந்து வந்தது. 
இந்நிலையில், ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் விசாரணைகள் முடிந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 19) தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில், “போட்டித் தேர்வு என்பது 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு, அதற்கு முன்னதாகவே மனுதாரர் 410 பேரும் மாநில அரசின் திட்டத்தின் படிதகுதித் தேர்வு எழுதியுள்ளனர். எனவே, 410 பேருக்கும் தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment