காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை சோதனை அடிப்படையில் வரும் நவம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மட்டும் மதுபாட்டில்களை திரும்ப பெறும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக கடைகளில் செயல்படுத்துவது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காலிமதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்படி நீதிபதிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும். என்றும், ஒரு மாவட்டத்தில் சோதனை முறையில் அமல்படுத்தி அதன் முடிவுகளை கண்கானித்த பிறகு பிற மாவட்டங்களுக்கும் அமல்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பான திட்டங்களை வகுக்க மேலும் ஒருமாதம் அவகாசம் வழங்கி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் திரும்ப பெறப்பட்ட காலி பாட்டில்களை பாட்டில்களை அப்புறப்புறப்படுத்துவதற்கு பதிலாக மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்களே அந்த பாட்டில்களை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டி நிபந்தனை விதிக்கலாம் என்றும், மலைப்பகுதிகளில் விற்பனை செய்யும்போது ரூ 10 கூடுதலாக பெற்றுக்கொண்டு பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும்போது பணத்தை திரும்ப கொடுக்கலாம் என்று கூறியுள்ளது.
இதில் காலி பாட்டிலை திரும்ப ஒப்படைக்காததால் வசூலான தொகை குறித்து அறிக்கை தாக்கல்செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil