Advertisment

துணை வட்டாட்சியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 3 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

பதவி உயர்வு தொடர்பாக துணை வட்டாட்சியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், ஆணையர் மற்றும் 3 மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai hc

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், ஆணையர் மற்றும் 3 மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பதவி உயர்வு தொடர்பாக துணை வட்டாட்சியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், ஆணையர் மற்றும் 3 மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

மேலும், இந்த அதிகாரிகள் ஜூலை 27-ம் தேதி ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி வாய்மொழியாக எச்சரிக்கை செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. 

இந்த சூழலில், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் துணை வட்டாட்சியர்களுக்கு வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த துணை வட்டாட்சியர் எஸ். சீனிவாசன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த துணை வட்டாட்சியர் வேலு உள்ளிட்ட துணை வட்டாட்சியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இடஒதுக்கீடு முறையில் வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்டது. 

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தாததால், பதவி உயர்வில் பாதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். 

துணை வட்டாட்சியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஜூலை 27-ம் தேதி வருவாய்த்துறை செயலாளர் வி. ராஜாராமன், வருவாய்த்துறை ஆணையர் எஸ்.கே. பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். 

மேலும், இந்த அதிகாரிகள் நேரில் ஆஜராகவில்லை என்றால், அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் வாய்மொழியாக எச்சரிக்கை தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment