பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் - உயர்நீதிமன்றம்

பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்

பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் - உயர்நீதிமன்றம்

மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் கடந்தாண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதே என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த ஆயிரத்து ஐம்பத்தி எட்டு ஆசிரியர்கள் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

சுமார் ஒன்றறை லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்ததையடுத்து ஒட்டு மொத்த தேர்வு நடைமுறைகளையும் தமிழக அரசு ரத்து செய்தது.

தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணை நடைபெற்றது.

Advertisment
Advertisements

அப்போது, தேர்வில் தேர்ச்சி பெற 48 லட்சம் ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாலேயே தேர்வை ரத்து செய்ததாக தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், முறைகேடு குறித்து சைபர் கிரைம் நடத்திய விசாரணையின் ரகசிய அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள், முறைகேடு செய்ததாக கூறப்படும் 196 பேரை தவிர்த்து தேர்வெழுதிய மற்றவர்களுக்கு தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, புற்றுநோய் போல பெருகி வரும் ஊழல்களே நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக கருத்து தெரிவித்தார். மேலும், இந்த முறைகேட்டில் ஏராளமான நபர்கள் தொடர்பிருப்பதால், தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதே என தெரிவித்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: