ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம்; 6 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் சி.பி.ஐ.-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் சி.பி.ஐ.-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Armstrong high court

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. Photograph: (IE Tamil)

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் சி.பி.ஐ.-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி, ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், காவல்துறை விசாரணை நியாயமாக இல்லை எனக்கூறி, விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பு தங்கள் விசாரணை திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்தது. மேலும், இது அரசியல் கொலை அல்ல என்றும், விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டது.

ஆனால், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், காவல்துறை அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விசாரணை நடத்த காவல்துறை தவறிவிட்டதாகவும் வாதிடப்பட்டது.

Advertisment
Advertisements

இந்த வழக்கில் காவல்துறையின் விசாரணையில் அதிருப்தி தெரிவித்த நீதிபதி வேல்முருகன், இன்று இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களையும் காவல்துறை உடனடியாக சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: