/indian-express-tamil/media/media_files/2025/10/17/asvaththaman-hc-2025-10-17-19-42-27.jpg)
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர்பாக அக்டோபர் 22-ம் தேதி நெரில் ஆஜராக அஸ்வாத்தமனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க மாநில செயலாளர் அஸ்வாத்தாமன் ஜாமீன் வழக்கு ஒன்றில் காணொலி வாயிலாக வழக்கறிஞருக்கான கோட் அணியாமல் ஆஜரானதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத்தில் கண்ணியத்துடன் ஆஜராக வேண்டாமா என அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி ராஜசேகர், மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் கோட் அணியவில்லை என்று அஸ்வத்தாமன் தெரிவித்த விளக்கத்தை ஏற்க மறுத்தார்.
பா.ஜ.க மாநில செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் முறையாக வழக்கறிஞர் உடை அணியாமல் எதிராக சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி துணைத் தலைவர் கதிரவன் முன்ஜாமீன் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கதிரவனுக்காக காணொலி வாயிலாக ஆஜரான வழக்கறிரும், பா.ஜ.க மாநில செயலாளருமான அஸ்வத்தாமன், வழக்கறிஞர் கோட் அணியாமல் வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து ஆஜரானார்.
இதைப் பார்த்த நீதிபதி ராஜசேகர் நீதிமன்றத்தில் கண்ணியத்துடன் ஆஜராக வேண்டாமா என அதிருப்தி தெரிவித்தார். மேலும், தோள்பட்டை வலிக்காக தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், அதனால் கோட் அணியாமல் ஆஜரானதாகவும் அஸ்வத்தாமன் கூறினார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி ராஜசேகர், இது தொடர்பாக அஸ்வத்தாமன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்காக அக்டோபர் 22-ம் தேதி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.