யானைகளின் நிலை : அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Chennai high court : தமிழ்நாடு முழுவதுமுள்ள கோவில்கள், மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தனியார் வசமுள்ள யானைகளின் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai high court : தமிழ்நாடு முழுவதுமுள்ள கோவில்கள், மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தனியார் வசமுள்ள யானைகளின் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தூத்துக்குடி மேயர் : பட்டியலின பெண்ணுக்கு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மனு!

தமிழ்நாடு முழுவதுமுள்ள கோவில்கள், மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தனியார் வசமுள்ள யானைகளின் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரிலுள்ள அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான யானை கோமதியை, கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில்,கோயில் யானையை அறக்கட்டளைக்கு சொந்தமான மையத்தில் வைத்து பராமரிக்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment
Advertisements

இந்நிலையில், யானை கோமதியை வனத்துறை புனர்வாழ்வு முகாமில் வைத்து பராமரிக்க தயாராக இருப்பதாகவும், யானையை தனியார் அறக்கட்டளை பராமரிக்க அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வனத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வனத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,யானை கோமதியின் நிலையை நிபுணர் குழு அமைத்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது..

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம் சத்தியநாராயணன், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, யானைகள் ஆராய்ச்சி நிபுணர் அஜய் தேசாய் தலைமையிலான குழுவினரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது..

அந்த அறிக்கையில், வனத்துறையில் பயன்படுத்தப்படும் யானைகளுக்கு ஓய்வு வயது நிர்ணயிக்கப்பட்டு அந்த ஓய்வு வயதை யானைகள் எட்டியவுடன் அவற்றை முகாமில் வைத்து பராமரிக்கப்படும் வழக்கம் உள்ள நிலையில், 8 வயதில் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட, யானை கோமதிக்கு தற்போது 65 வயதாகி விட்டதாகவும், அது ஓய்வுபெறும் வயதை கடந்து விட்டதால் யானை கோமதியை புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்புவதே சிறந்தது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது..

நிபுணர் குழுவின் அறிக்கையை தொடர்ந்து, யானை கோமதியை திருச்சி எம்.ஆர் பாளையத்திலுள்ள வனத்துறைக்கு சொந்தமான புனர் வாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்து பராமரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தனியார் வசமுள்ள யானைகளின் நிலை குறித்து நிபுணர் குழு மூலம் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்...

Chennai Chennai High Court Elephant

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: