/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-28T152844.060.jpg)
ரவுடி பேபி சூர்யா வீடியோக்களை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபாராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியன் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த சிலர் சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் உள்ளதாக கூறி சூளை பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த நபர்கள் மீது இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் நீதிமன்ற உத்தரவை அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை என்று கூறி சுகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், கோவில் சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஏற்பட்ட காலதாமதம் குறித்து உதவி ஆணையர் தனது அறிக்கையில் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இது குறித்து அவர் வருத்தம் தெரிவிக்காத நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ 1 லட்சமும், உதவி மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரமும் அபாராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த அபாராத தொகையை இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இந்த அபாரத தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.