ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜக்கியின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜக்கியின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

author-image
WebDesk
New Update
ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜக்கியின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

Advertisment

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், தகுந்த ஆணையத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அறக்கட்டளை கட்டடங்களை கட்டியதால் நோட்டீசில் அளிக்கப்பட்டுள்ளது.

publive-image

கோவை மாவட்டத்தில் ஈஷா அறக்கட்டளையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள வசதிகள் 'கல்வி' பிரிவின் கீழ் வரும் என்று கூறியது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கை தொடருவதற்கான காரணம் வழங்கக்கோரி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்தது.

Advertisment
Advertisements

முன்னதாக, இந்த அறக்கட்டளை யோகா பயிற்சி அளிப்பதாகவும், பள்ளி நடத்துவதாகவும், அது ‘கல்வி’ வரம்பிற்குள் வரும் என்றும் மத்திய அரசு பெஞ்சில் தெரிவித்தது.

மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, யோகா மையம் 'கல்வி நிறுவனம்' என்ற வரையறையின் கீழ் வரும், எனவே, கட்டுமானங்கள் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பெஞ்ச் கூறியது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழக்குத் தொடர எடுத்த நடவடிக்கைகளை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிமன்றத்தை அணுகியது.

இதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், தகுந்த ஆணையத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அறக்கட்டளை கட்டடங்களை கட்டியதால் நோட்டீசில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் வரம்பிற்குள் வராது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது ஒரு கல்வி நிறுவனமாகக் கருதப்பட்டால், அடித்தள வளாகத்தின் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சதுர மீட்டரில் சுமார் 10,000 சதுர மீட்டருக்கு மட்டும் பொருந்தும்.

2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பல்வேறு கட்டிடங்களை ஈஷா அறக்கட்டளை மூலம் கட்டியதற்காக மாசு கட்டுப்பாடு வாரியம் இவர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியது. இதை, தற்காலிக தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி டி கிருஷ்ணகுமார் அடங்கிய முதல் பெஞ்ச் ரத்து செய்தது.

இந்த விவகாரம் நிலுவையில் இருக்கும் போது, ​​மன, தார்மீக மற்றும் உடல் வளர்ச்சிக்கு அவசியமான விஷயங்களைப் பற்றி பயிற்சி அளிக்கும் நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் 'கல்வி நிறுவனம்' என்ற வரையறைக்குள் வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு மே 19ஆம் தேதி ஈஷா அறக்கட்டளை, தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் தங்களது பணிகளை தொடர்வதாக ஒரு குறிப்பாணையை வெளியிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court Madras High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: