பாத்திமா லத்தீப் மரணம் : சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
Chennai high court rejects cbi enquiry in fathima latheef death : சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Chennai high court rejects cbi enquiry in fathima latheef death : சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
chennai, chennai high court, chennai iit. iit death, fathima latheef, kerala, iit student, death, cbi, enquiry, சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐஐடி, பாத்திமா லத்தீப், மர்ம மரணம், சிபிஐ விசாரணை, மனு தள்ளுபடி
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் கடந்த மாதம் 9 ஆம் தேதி ஐஐடி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
Advertisment
Advertisements
பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக கூறி விடுதி காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த புகாரில் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை விசாரணைக்கு மாற்றபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால் மாணவி பாத்திமா தற்கொலைக்கு தூண்டப்பட்டதாகவும் மத ரீதியாக துன்புறுத்தியதாக மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறையும் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக பாத்திமாவின் தந்தையும் பேட்டியளித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் கடந்த 2018 ம் ஆண்டு முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி யில் 5 மாணவர்கள் இதே போல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிட கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வு விசாரித்து உத்தரவை தள்ளிவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதிகள், ஐ ஐ டி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகவும், சிபிஐ யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசுத்தரப்பில் அளித்த விளக்கத்தை ஏற்பதாகவும். அரசு விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்வதாகவும். மனுவில் போதிய ஆவண ஆதாரங்கள் இல்லை எனவும் தங்களின் உத்தரவில் தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களுக்கு தேவையான மன நல ஆலோசனை வழங்க ஐஐடி நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.