Advertisment

தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் : தடை கோரிய மனு தள்ளுபடி

chennai high court : தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தை நாட முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் : தடை கோரிய மனு தள்ளுபடி

பாரத் பெட்ரோலிய தொழிற்சங்க போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை

சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

Advertisment

சென்னையில் ஓடும் கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக, ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப் பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

ஏப்ரல் 23ம் தேதி நேரில் ஆஜராக அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம் (IASE), நீரி (NEERI) அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து, தலா ஒருவர் அடங்கிய குழுவை நியமித்து, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

அபராத உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள், சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த 604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை கருத்தில் கொள்ளாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ஏற்கனவே தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும், அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தை நாட முடியாது எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்வதாகவும் தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்வதற்காக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Chennai High Court Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment