அரசு மருத்துவர்கள் பணி நியமனம்… வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது; ஐகோர்ட் அதிரடி

மருத்துவ கவுன்சில் பதிவு விவகாரம்; அரசு மருத்துவர் பணி நியமன உத்தரவுகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை செவ்வாய்கிழமைக்கு தள்ளிவைத்தது

author-image
WebDesk
New Update
Madras High Court

மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக் கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கில், அரசு மருத்துவர்கள் நியமனம் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம், கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 2,642 மருத்துவர்களின் தேர்ச்சி பட்டியலை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டது. பின்னர் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்து 2642 மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வருகின்ற 26 ஆம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனர். 

இதற்கிடையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பின்படி, கடந்த 2024-ம் ஜூலை 15-ம் தேதிக்கு முன்பு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள் மட்டுமே, உதவி மருத்துவர் பணிக்கு தகுதி பெற்றவர்கள். ஆனால், ஜூலை 15-ம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள் ஏராளமானோர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். அதில், 400 மருத்துவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பில் பங்கேற்றுள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சான்றிதழ் சரிப்பார்ப்பில் பங்கேற்ற 400 மருத்துவர்கள் தகுதியில்லாதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டனர்

இதை எதிர்த்து மருத்துவர் சாய் கணேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுக்களில், 2024 ஜூலை 15 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்தோம். ஆனால் பதிவு செய்யப்படவில்லை. இதனால் தற்காலிக பதிவுச் சான்றிதழை வைத்து அரசு உதவி மருத்துவர் தேர்வுக்கு விண்ணப்பித்தோம். மருத்துவ பல்கலைக்கழகம், சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் செய்ததால், நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற முடியதாதற்கு பல்கலைக்கழகம் தான் காரணம். எனவே தங்களுக்கும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும், இறுதிப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Advertisment
Advertisements

இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, மனுதாரர்களும் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தான். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவு இருந்தால் போதுமானது எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது என்று வாதிட்டார். 

இதனையடுத்து, அரசு மருத்துவர் பணி நியமன உத்தரவுகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி விசாரணையை செவ்வாய்கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Madras High Court Doctor

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: