கொடி, சின்னம் பயன்படுத்த எதிர்ப்பு: 2 வாரங்களில் ஓ.பி.எஸ் பதில் தெரிவிக்க கோர்ட் உத்தரவு

அ.தி.மு.க கொடி, சின்னம் பயன்படுத்தவதை எதிர்த்து இ.பி.எஸ் வழக்கு: 2 வாரங்களில் ஓ.பி.எஸ் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க கொடி, சின்னம் பயன்படுத்தவதை எதிர்த்து இ.பி.எஸ் வழக்கு: 2 வாரங்களில் ஓ.பி.எஸ் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
ops

அ.தி.மு.க கொடி, சின்னம் பயன்படுத்தவதை எதிர்த்து இ.பி.எஸ் வழக்கு: 2 வாரங்களில் ஓ.பி.எஸ் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு தடை விதிக்கக் கோரி இ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அ.தி.மு.க பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "அ.தி.மு.க பொதுச்செயலாளர் என தன்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அ.தி.மு.க.,வின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அ.தி.மு.க பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கட்சியினுடைய சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்தி வருவது தவறு. அது சட்டவிரோதமானது, என்று வாதிட்டார்.

Advertisment
Advertisements

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவுக்கு பதில் அளிக்க குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Admk Eps Ops

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: