/tamil-ie/media/media_files/uploads/2018/11/09IDOL.jpg)
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்கு : சிலைகள் திருட்டு தொடர்பான 50 வழக்குகளின் ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் காவல்துறையினர் ஒப்படைக்கப்படவில்லை என ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு துறையினரிடம் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு
அப்போது சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல் இந்த மனு மீது விரைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கிடையில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சிலை கடத்தல் தொடர்பான 50 வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை காவல்துறையினர் இன்னும் தங்களுக்கு தரவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ ஜி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, 50 முதல் தகவல் அறிக்கைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தர வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.