டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என்று சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொண்டது.
முன்னதாக,பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தமிழக குற்றப்பிரிவு சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
https://tamil.indianexpress.com/tamilnadu/fir-against-tamil-nadu-dgp-woman-ips-officers-sexual-harassment-250134/
குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 354 ( பெண்ணை தாக்குவது, தாக்க முனைவது) தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு) சட்ட பிரிவு 3 மற்றும் 4 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப்ரவரி 22 ம் தேதி தாஸின் மீது முறையான புகார் அளிக்க சென்னை செல்லும் வழியில் பாதிக்கப்பட்டவரின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற செங்கல்பட்டு எஸ்.பி. டி கண்ணன் ஐ.பி.எஸ்ஸின் பாத்திரத்தையும் இந்த குழு விசாரிக்கும்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறை உயர் அதிகாரி என்பதால் விசாரணையை காவல்துறையின் எந்தப் பிரிவானாலும் செய்வது முறையாக இருக்காது. குறைந்தபட்சம் அந்த விசாரணை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரைவாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மதியம் 2.30 மணியளவில் ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை விரைவாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்தது.
கடந்த மாதம் முதல்வர் பழனிச்சாமி, புதுச்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக பாதுகாப்பு பணிகளை மேற்பாவையிட சென்னையில் இருந்து டிஜிபி ரஜேஷ் தாஸ் என்பவர் புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்ற மாவட்ட பெண் எஸ்பி ஒருவரிடம் டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி, தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து சென்னை டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிக்க சென்னை வந்துள்ளார். அப்போது டிஜிபி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தலின்பேரில், அவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுத்து நிறுத்திய அம்மாவட்ட எஸ்பி டி கண்ணன் என்பவர், பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளிப்பதை தடுக்கும் நோக்கில், டிஜிபி ராஜேஷ் தாஸிடம் போனில் பேசும்படி வற்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“