Advertisment

சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை அகற்றக்கோரிய வழக்கு: 19-ஆம் தேதி தீர்ப்பு

சட்டசபையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கில் வரும் திங்களன்று தீர்ப்பு வழங்குவதாக, உயர் நீதிமன்றம் அறிவித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை அகற்றக்கோரிய வழக்கு: 19-ஆம் தேதி தீர்ப்பு

சட்டசபையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கில் வரும் திங்களன்று தீர்ப்பு வழங்குவதாக, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

Advertisment

இதுதொடர்பாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவப்படம் தமிழக சட்டசபை கூட்ட அரங்கில் திறக்கப்பட்டுள்ளது. இதை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சபாநாயகரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஊழல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனை பெற்றவர். அவருக்கு விசாரணை நீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவரின் படத்தை சட்டசபையில் திறந்து வைப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.

தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க தடை விதிக்க கேட்டு, சென்ற ஆண்டு தான் தொடர்ந்த வழக்கு, இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் முழு உருவ படத்தை சட்டசபையில், சபாநாயகரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உருவ படத்தை திறக்க, எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்துக்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, அவரது படத்தை திறந்து வைத்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பானது. இந்த செயல் எதிர்கால சந்ததியினர் மத்தியில் எதிர்மறையான கருத்தை கொண்டு செல்லும்.

சபாநாயகர் தனபால், ஜெயலலிதாவால் இருமுறை சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர். அதனால், அவருக்கு விசுவாசத்தை காட்டும் விதமாக, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்துள்ளார் .

எனவே, சட்டசபை மன்றத்தில் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை உடனடியாக அகற்ற, சட்டசபை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி வாதிட்டார். சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஒருவரின் படத்தை , சட்டத்தை இயற்றும் சட்டமன்றதில் திறந்து வைப்பது சட்டத்துக்கு புறம்பானது. அதை சபாநாயகர் திறந்து வைத்தது அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகும். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிலானது எனவே பேரவையில் உள்ள ஜெயலலிதா முழு உருவ புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடுகையில், ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்ததால், மனுதாரரின் உரிமை ஏதும் பாதிக்கப்படவில்ல. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, இம்மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர். இம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக, சமுதாய மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். அப்படிப்பட்டவருக்கு படம் திறந்து வைத்ததில் எந்த தவறும் இல்லை. சபாநாயகரின் முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று தெரிவித்தார் .

அப்போது நீதிபதிகள், சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றங்களால் தலையிட முடியாது. சட்டசபையின் அனைத்து நடவடிக்கையிலும் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. சட்டமன்ற விதிகள் மீறப்பட்டால் தான், அதில் நீதிமன்றம் தலையிட முடியும் என்று கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கள் அன்று அறிவிப்பதாக தெரிவித்தனர்.

Dmk Jayalalithaa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment