/tamil-ie/media/media_files/uploads/2022/10/madras-HC.jpg)
தமிழக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழை மக்களை சென்றடைவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனை மருந்து ஸ்டார் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி தனக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை பெறுவதற்காக வழக்கு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனை தனது காலாவதியான மருந்துகளை ஏழை மக்களுக்கு வழங்குவதாக குற்றசாட்டு எழுந்ததை கவனித்தது. மேலும், கொரோனா பதிப்பிற்குப்பின் குரங்கு காய்ச்சல், என்று பல நோய்கள் தமிழகம் முழுவதும் பரவி வந்தது. இவற்றிற்கெல்லாம் விளக்கமளிக்க அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் புதிதாக நோய்கள் பரவுவதால் காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை தயாராவதனால் அறிக்கை தாக்கல் செய்ய அரசு அவகாசம் கேட்டுள்ளது.
இதை ஏற்று வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 4ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.