பாத்திமா லத்தீப் மரணம் : உள்துறை மற்றும் போலீஸ் ஒப்புதலை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
Cbi enquiry for chennai iit student Fathima latheef death : சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக , உள்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் ஒப்புதலை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
Cbi enquiry for chennai iit student Fathima latheef death : சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக , உள்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் ஒப்புதலை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
chennai, chennai high court, chennai iit, iit student, iit death, fathima latheef, cbi enquiry, tamil nadu, governement, PM Modi, abdul latheef, union home ministry, police official, consent, cbi, enquiry, சென்னை, சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐஐடி, ஐஐடி மாணவி மரணம், ஐஐடி மரணம், பாத்திமா லத்தீப், அப்துல் லத்தீப், பிரதமர் மோடி, சந்திப்பு, சிபிஐ, விசாரணை, தமிழக அரசு அனுமதி
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisment
பாத்திமா லத்தீப் மரணம் விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 13ம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் ஒப்புதலை தொடர்ந்து, இந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு டிசம்பர் 14ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் , சமீபத்தில் டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி்யிருந்த நிலையில், இந்த உத்தரவு அமலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
பிரதமர் மோடி உடனான சந்திப்பு நிகழ்ந்திருந்த நிலையில், மத்திய மக்கள் தொடர்பு, பொது அனுமதி அமைச்சகத்திலிருந்து தமிழக அரசுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து, டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரைணக்கு உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பிரனிடமிருந்து வந்த தொடர்கோரிக்கைகளின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன மற்றும் வழக்கு விபரம் : சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் கடந்த மாதம் 9 ஆம் தேதி ஐஐடி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிட கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வு விசாரித்து உத்தரவை தள்ளிவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் டிசம்பர் 13ம் தேதி உத்தரவிட்ட நீதிபதிகள், ஐ ஐ டி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகவும், சிபிஐ யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசுத்தரப்பில் அளித்த விளக்கத்தை ஏற்பதாகவும். அரசு விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்வதாகவும். மனுவில் போதிய ஆவண ஆதாரங்கள் இல்லை எனவும் தங்களின் உத்தரவில் தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களுக்கு தேவையான மன நல ஆலோசனை வழங்க ஐஐடி நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.