Advertisment

மாரடைப்பு? சென்னையில் 41 வயது ஜிம் பயிற்சியாளர் திடீர் மரணம்

சென்னை, கொரட்டூரில் ஜிம் பயிற்சியாளர், கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
tamil news

ஜிம் பயிற்சியாளர்

சென்னை, கொரட்டூரில் ஜிம் பயிற்சியாளர், கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சென்னை அம்பத்தூரில் உள்ள மீனம்பேடு பகுதியில் பி யோகேஷ், வைஷ்ணவி என்ற மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார்.

கொரட்டூரில் உள்ள வெங்கடேஷ்வரா நகரில் இயங்கி வரும் உடற் பயிற்சி மையத்தில் அவர் கடந்த சில மாதங்களாக பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

ஞாயிற்றுகிழமை மாலையில், அவர் வழக்கம் போல் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு, தீவிரமான உடற் பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். அவர் பாடி பில்டிங் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் அவர் கடுமையான உடற் பயிற்சியை முடித்துவிட்டு, குளிக்க சென்றுள்ளார். ஆனால் அதிக நேரம் ஆனபோதும், அவர் வெளியே வரவில்லை. இதைத்தொடர்ந்து அவரது உறவினர் அதே உடற் பயிற்சி கூடத்தில் வேலை செய்வதால், அவர் கழிவறைக்கு சென்று பார்த்துள்ளார்.

தொடர்ந்து அவர் வெளியே வராததால், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, யோகேஷ் மயங்கிய நிலையில் கிழே விழுந்து கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை  உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கொரட்டூர் காவல்துறையினர், செக்‌ஷன் 174 சி.ஆர்.பி.சி-யின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். யோகேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment