/indian-express-tamil/media/media_files/2024/11/13/TsnEKGoio2fLhuFJewlS.jpg)
அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்தி குத்து
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது விக்னேஷ் இளைஞர் மற்றும் மற்றொரு நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் ஆத்திரத்தில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மருத்துவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர்.
அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம்
பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், விக்னேஷ் என்ற நபர் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று தவறாக புரிந்துகொண்டு மருத்துவரை கத்தியால் குத்தியதாகவும், தற்போது மருத்துவர் பாலாஜி நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us