Advertisment

எந்தெந்த மாவட்டங்களில் வெள்ளிக் கிழமை விடுமுறை?

சென்னையில் மழை பாதிப்பு காரணமாக சென்னை, மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
School student tamil nadu

எந்தெந்த மாவட்டங்களில் வெள்ளிக் கிழமை விடுமுறை?

சென்னையில் மழை பாதிப்பு காரணமாக சென்னை, மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 வட்டங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 வட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை பெய்த கனமழையால் சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. 

மழை பாதிப்பு காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளை ரத்து செய்து ஒத்திவைத்தன. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மழை பாதிப்பு காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரி வளாகங்களில் விழுந்த மரங்கள் மற்றும் வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாவட்டத்தில்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 வட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  “மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023  முதல் 7.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.  புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் நாளை (8.12.2023) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கும் விடுமுறை

அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் ஆகிய 6 வட்டங்களுக்கும் விடுமுறை  என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து கன மழை பெய்ததால் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய இரண்டு வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மழையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Schools And Colleges
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment