Advertisment

சென்னையில் சீரியல் லைட்டால் பறிபோன கணவன் உயிர்: மனைவியின் பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம்

திருமணம் ஆகி மனைவிக்கு முதல் பிறந்தநாள் என்பதால் அதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த அகஸ்டின் பால், நேற்று மாலை வீடு முழுவதும் சீரியல் பல்ப் அமைத்து அலங்காரம் செய்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Chennai man dies

Chennai

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை மேற்கு மாம்பலத்தில் மனைவி பிறந்தநாளை கொண்டாட சீரியல் பல்புகளை கட்டியபோது மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சென்னை மேற்கு மாம்பலம், பிருந்தாவனம் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29). சொந்தமாக பார்சல் சர்வீஸ் நடத்தி வந்திருக்கிறார். இவரது மனைவி கீர்த்தி. இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 8 மாதங்களே ஆன நிலையில் நேற்று கீர்த்திக்கு 25வது பிறந்தநாள் வந்தது.

திருமணம் ஆகி மனைவிக்கு முதல் பிறந்தநாள் என்பதால் அதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த அகஸ்டின், நேற்று மாலை வீடு முழுவதும் சீரியல் பல்ப் கட்டி அலங்காரம் செய்திருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment