Advertisment

தமிழகத்தில் நவ.1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 1 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழில்நிலை உருவாகக்கூடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வடகிழக்கு பருவ மழை, Northeast monsoon

வடகிழக்கு பருவ மழை, Northeast monsoon

நவம்பர் 1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இந்த சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல்வரை ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இது மேலும் மேற்கு நோக்கி நகரும்போது வடகிழக்கு பருவக்காற்று வலுவடைந்து அதன் காரணமாக வரும் நவம்பர் 1 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழில்நிலை உருவாகக்கூடும்.

வடகிழக்கு பருவமழை நவம்பர் 1ம் தேதி வாக்கில் தமிழகம், புதுவை, மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, ராயல்சீமா, தெற்கு உள்கடலோர கர்நாடகா, கேரளாவில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

அக்.1 முதல் 29 வரை பெய்துள்ள சராசரியாக தமிழகம் மற்றும் புதுவையில் 16 செ.மீ. பதிவாகியுள்ளது. இயல்பு 17 செ.மீ. இயல்பைவிட 7 சதவிகிதம் குறைவு.

சென்னையில் 29 நாளில் சராசரியாக 12 செ.மீ. இயல்பாக 24 செ.மீ. பெய்யவேண்டும். இயல்பைவிட 51 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தாமதமானதற்கு காரணம் லிபான் மற்றும் டிட்லி புயல் உருவானதே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment